My page - topic 1, topic 2, topic 3

பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் ஊடுபயிர்கள்!

ஊடுபயிர்கள்

டுபயிர் சாகுபடி, துணை வருமானத்தைத் தருவதுடன், முக்கியப் பயிரைத் தாக்கும் பல்வேறு பூச்சிகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது. இவ்வகையில், பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் ஊடுபயிர்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

+ நிலக்கடலையில், தட்டைப்பயறை ஊடுபயிராக இட்டால், சிவப்புக் கம்பளிப் புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

+ நிலக்கடலையில், கம்பை ஊடுபயிராக இட்டால், சுருள்பூச்சி மற்றும் இலைப்பேனைக் கட்டுப்படுத்தலாம்.

+ துவரை, பாசிப்பயறு சாகுபடியில், சோளத்தை ஊடுபயிராக இட்டால், காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

+ பருத்தியில், சூரியகாந்தியை ஊடுபயிராக இட்டால், பச்சைத் தத்துப் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

+ பருத்தியில், பாசிப்பயறு, உளுந்து, ஆமணக்கு, சோயாவை ஊடுபயிராக இட்டால், பருத்தியைத் தாக்கும் பூச்சிகள் அனைத்தையும் கட்டுப்படுத்தலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

+ மக்காச்சோளத்தில், ஆமணக்கை ஊடுபயிராக இட்டால், புரொட்டீனியா புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

+ மக்காச்சோளத்தில், சோளத்தை ஊடுபயிராக இட்டால், குருத்து ஈ, தண்டுத் துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம்.

+ முட்டைக்கோசில், தக்காளியை ஊடுபயிராக இட்டால், வைரமுதுகு அந்துப்பூச்சி மற்றும் இலைப்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

+ முட்டைக்கோசில், கொத்தமல்லியை ஊடுபயிராக இட்டால் அசுவினியைக் கட்டுப்படுத்தலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

+ சோளத்தில், அவரையை ஊடுபயிராக இட்டால், சோளத்தண்டுப் புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

+ கரும்பில், தக்கைப்பூண்டை ஊடுபயிராக இட்டால், கரும்புத்தண்டுத் துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம்.

+ கத்தரியில், கொத்தமல்லியை ஊடுபயிராக இட்டால், தண்டுப்புழு மற்றும் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

+ பாகல் சாகுபடியில், மக்காச்சோளத்தை ஊடுபயிராக இட்டால், பழ ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

+ வெண்டையில், கொத்தமல்லி மற்றும் சாமந்தியை ஊடுபயிராக இட்டால், தண்டுப்புழு மற்றும் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

+ வெள்ளரியில், மக்காச்சோளத்தை ஊடுபயிராக இட்டால், வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம்.

+ தட்டைப்பயறு சாகுபடியில், சோளத்தை ஊடுபயிராக இட்டால், அசுவினி மற்றும் இலைப்பேனைக் கட்டுப்படுத்தலாம்.


முனைவர் காயத்ரி சுப்பையா, உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், செங்கல்பட்டு – 603 203.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • பயிர்ப் பாதுகாப்பில் உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள்!

  • ஊடுபயிர்களைத் தேர்வு செய்வது எப்படி?

  • வறட்சியிலும் வளம் கொழிக்கும் நாவல்!

  • நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்!

  • மீன் கழிவை உரமாக மாற்றுவது எப்படி?

  • தக்காளியைத் தாக்கும் நோய்கள்!

  • மணத்தக்காளி சாகுபடி!

  • களர் உவர் நிலத்தை விளைநிலமாக மாற்றுவது எப்படி?

  • பால் உற்பத்தியில் பசுந்தீவனத்தின் அவசியம்!