My page - topic 1, topic 2, topic 3

நாய்கள் மற்றும் எலிகள் மூலம் மக்களுக்குப் பரவும் காய்ச்சல்!

நாய்கள் மற்றும் எலிகள் மூலம் மக்களுக்குப் பரவும் காய்ச்சல்!

வயலோர வளையில்தான் எலிகள்பல வசித்திடும்
எலியின்சிறு நீரில்தான் நோய்க்கிருமி கோடி வாழ்ந்திடும்

சேறுகொண்ட நீரிலே சுருள் கிருமிதனும் பரவிடும்
வீறுகொண்ட கிருமியும் விரைந்து பெருகக் கண்டிடும்

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

கரும்புநெல்லு பயிரிட விவசாயி கால்பதிக்க இருந்திடும்
கால்மாதம் கழிந்தபின் காய்ச்சல் காண நேரிடும்

குடிநீரும் தீவனமும் திறந்து நாமும் வைத்திட
சிறுநீரும் பட்டுவிட்டால் சுருள்கிருமி தொற்றிடும்

கால்வலி தலைவலி பின் அடிமுதுகுவலிக் கூடிடும்
காலம்சிறிது கடந்திடக் காமாலையும் சேர்ந்திடும்

சிலபல நாள்களும் சிவந்து கண்கள் இருந்திடும்
சிகிச்சையற்றுப் போனால்தான் சிறுநீரகமும் வீங்கிடும்

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வயிற்றுவலிக் கண்டிட வாந்திகூட வந்திடும்
மூளைஅழற்சிக் கண்டிட மூச்சும் சமயம் முடங்கிடும்

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

காய்ச்சல் கண்ட மாடும்கூடக் காமாலையைக் கண்டிடும்
காபி போன்ற நிறத்திலேயே சிறுநீரும் சிந்திடும்

மடிவீக்கம் இல்லாமல் மடிநோயும் வந்திடும்
மறுபடியும் மறுபடியும் சிவந்த பாலைச் சுரந்திடும்

கணிசமான பாலை மட்டும் கரிசனமாய்க் கறந்திடும்
கால்கடுக்க நடந்திடும் மூட்டு உறைஅழற்சி கண்டிட

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சினைமாடாய் இருந்துவிட்டால் சிதைந்த கரு தள்ளிடும்
சிலமாதம் ஆனபின்தான் சினை மீண்டும் தங்கிடும்

தீவனத்தைக் கண்டுவிட்டால் தீட்டுப்போல ஒதுங்கிடும்
தீவிரமாய் நோயைக் கண்டால் இறப்புக்கூட நேரிடும்

நாயுடனும் நாமும்தான் கவனமாகப் பழகணும்
நாயின் சிறுநீரிலும் சுருள்கிருமி வந்து பரவிடும்

சுரம்கண்ட நாயும்பின் வாந்திபேதிக் கண்டிடும்
சிறுநீரகம் சிவந்திடும் கல்லீரல்கூடக் கனத்திடும்

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சோறுநீரைச் சுத்தமாகக் காய்ச்சி தினமும் பருகணும்
சேறுநீரில் கால் பதிக்குமுன் காலணியால் காக்கணும்

சுரமின்றி வாழ்ந்துவிடச் சுற்றுபுற எலிகளைத்தான் விரட்டணும்
சுகாதாரம் பேணிவிடத் தடுப்பூசி நாய்க்கு அளிக்கணும்


நாய்கள் மற்றும் எலிகள் மூலம் மக்களுக்குப் பரவும் காய்ச்சல்!

முனைவர் சு.சரவணன், பேராசிரியர், கால்நடைப் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வாய்வியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், நாமக்கல் – 637 002.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • பழ ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

  • சங்க இலக்கியத்தில் காட்டப்படும் யாடும் ஆடும்!

  • தேனீக்கள் மூலம் கிடைக்கும் பொருள்கள்!

  • ரேபிஸ் என்னும் வெறிநோயும் தடுப்பு முறையும்!

  • மூங்கில் குருத்தின் மருத்துவக் குணங்கள்!

  • சுகாதாரமாகப் பால் கறக்கும் முறை!

  • சத்துகள் செறிவூட்டப்பட்ட பயிர் வகைகள்!

  • துரியன் பழத்தின் மருத்துவக் குணங்கள்!

  • வருக மஞ்சளின் சிறப்புகள்!