கருடன் சம்பா நெல்லின் வயது 150-160 நாட்கள். 155 செ.மீ. உயரம் வளரும். சம்பா பட்டத்துக்கு ஏற்றது. மானாவாரி, நேரடி விதைப்பு, ஒற்றை நாற்று நடவுக்கும் ஏற்றது.
நெல், மஞ்சளாகவும், மிதமான நீளத்தில் சன்னமாகவும், கழுத்துப் பகுதியில் வெள்ளை வளையத்துடனும் இருக்கும். அரிசி வெள்ளையாக இருக்கும். எக்டருக்கு 5.20 டன் மகசூல் கிடைக்கும்.
விளம்பரம்:
பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
இந்த அரிசியில், சாப்பாடு, இட்லி, தோசை, புட்டு, இடியாப்பம் மற்றும் பலகாரங்களைச் செய்யலாம். உடலை வலுவாக்கும். இரும்புச்சத்து அதிகமிருப்பதால், இரத்தச் சோகையைத் தடுக்கும். சிறுநீரகத் தொற்று மற்றும் உடல் வலியைக் குணப்படுத்தும்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


