தமிழ்நாட்டின் மானாவாரி பகுதிகளில் புழுதிக்கால் முறையில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்கு உகந்த நெல் இரகங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
டி.கே.எம்.15
+ இதன் வயது 115-118 நாட்கள்.
+ பகுதி மானாவாரி, ஏரிக்கால் பாசனப் பகுதிகளுக்கு ஏற்றது.
+ பயிர், மத்திய உயரத்தில் இருக்கும்.
+ எக்டருக்கு 4,007 கிலோ மகசூல் கிடைக்கும்.
+ அரிசி, மத்திய சன்னமாக, வெள்ளை நிறத்தில் இருக்கும்.
+ தண்டுத் துளைப்பான், இலைச் சுருட்டுப்புழு மற்றும் ஆனைக்கொம்பன் தாக்குதலை முற்றிலும் தாங்கி வளரும்.
+ குலைநோய், இலையுறை அழுகல், இலையுறைக் கருகல், இலைப்புள்ளிநோய், துங்ரோ ஆகியவற்றை மிதமாகத் தாங்கி வளரும்.
முனைவர் சி.பானுமதி, முனைவர் இரா.அகிலா, முனைவர் க.சிவகாமி, முனைவர் செ.தமிழ்ச்செல்வி, முனைவர் அ.புனிதா, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர், திருவள்ளூர் மாவட்டம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



