My page - topic 1, topic 2, topic 3

களர், உவர் மண்ணில் பயிரிட ஏற்ற நெல் இரகங்கள்!

உவர் மண்

மிழ்நாட்டில் நெல் சாகுபடி முக்கியமானது. செம்மண், கரிசல் மண் என எல்லா வகை மண்ணிலும் நெல் பயிரிடப்படுகிறது. இவ்வகையில், களர், உவர் மண்ணில் பயிரிட ஏற்ற நெல் இரகங்களைப் பார்க்கலாம்.

திருச்சி 4

இதன் வயது 125 நாட்கள்.

பயிர் நடுத்தர உயரத்தில் சாயாமல் இருக்கும்.

பின் சம்பா மற்றும் தாளடியில் பயிரிட ஏற்றது.

எக்டருக்கு 5,730 கிலோ நெல் மகசூல் கிடைக்கும்.

இலைச் சுருட்டுப்புழு, குருத்துப்புழு, ஆனைக்கொம்பன், குலை நோய், இலைப்புள்ளி நோய் ஆகியவற்றை மிதமாகத் தாங்கி வளரும்.

அரிசி, நடுத்தரச் சன்னமாக வெள்ளை நிறத்தில் இருக்கும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

அரவைத் திறன் 67 சதமாகவும், முழு அரிசி காணும் திறன் 57.2 சதமாகவும் இருக்கும்.

திருச்சி 5

இதன் வயது 110-115 நாட்கள்.

இது, திருச்சி 2 இரகத்தின் சடுதி மாற்ற இரகமாகும்.

குறுவை, பின் தாளடி மற்றும் நவரைப் பருவத்தில் பயிரிட உகந்தது.

உவர் நிலத்தில் பயிரிட ஏற்றது.

எக்டருக்கு 5,100 கிலோ நெல் மகசூல் கிடைக்கும்.

அரவைத் திறன் 64 சதமாகவும், முழு அரிசி காணும் திறன் 54 சதமாகவும் இருக்கும்.


முனைவர் சி.பானுமதி,

முனைவர் இரா.அகிலா, முனைவர் க.சிவகாமி, முனைவர் செ.தமிழ்ச்செல்வி, முனைவர் அ.புனிதா, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர், திருவள்ளூர் மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • வேலை வாய்ப்பைத் தரும் அசோலா!

  • மேலே மின்சார உற்பத்தி; கீழே பயிர் சாகுபடி!

  • முயல் மசால் சாகுபடி!

  • பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி!

  • கோடை உழவு கோடி நன்மை தரும்!

  • நாவற் பழங்களைக் கையாளும் முறைகள்!

  • சன்னல் ஓரத்தில் சத்துச் சுரங்கம்!

  • வேலி மசால் சாகுபடி!

  • அகத்திக்கீரை சாகுபடி!