My page - topic 1, topic 2, topic 3

சொர்ணவாரி பட்டத்துக்கு ஏற்ற நெல் இரகங்கள்!

சொர்ணவாரி பட்ட

மிழ்நாட்டில், குறுவை, சம்பா, தாளடி எனப் பல பருவங்களில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இவ்வகையில், சொர்ணவாரி பட்டத்தில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற நெல் இரகங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

டி.பி.எஸ். என்னும் திருப்பதிசாரம் 5

இதன் வயது 118 நாட்கள்.

பயிரின் உயரம் மத்திமமாக இருக்கும்.

இலைச் சுருட்டுப்புழு, தண்டுத் துளைப்பான், ஆனைக்கொம்பன், புகையான் மற்றும் தத்துப்பூச்சித் தாக்குதலை மிதமாகத் தாங்கி வளரும்.

எக்டருக்கு 6,300 கிலோ மகசூல் கிடைக்கும்.

நெல் பருமனாக இருக்கும். அரிசி வெள்ளையாக இருக்கும். இட்லி செய்ய ஏற்றது.

கோ.54

இதன் வயது 115-118 நாட்கள்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பயிரின் உயரம் மத்திமமாக இருக்கும்.

புகையான், குலை நோய், இலையுறைக் கருகல் நோய் மற்றும் பழுப்புப் புள்ளி நோயை மிதமாகத் தாங்கி வளரும்.

எக்டருக்கு 6,350 கிலோ நெல் மகசூல் கிடைக்கும்.

அரிசி, மத்திய சன்னமாக வெள்ளை நிறத்தில் இருக்கும்.

கோ.55

இதன் வயது 115 நாட்கள்.

பயிரின் உயரம் மத்திமமாக இருக்கும்.

எக்டருக்கு 6,050 கிலோ நெல் மகசூல் கிடைக்கும்.

அரிசி, மிகச் சன்னமாக, வெள்ளை நிறத்தில் இருக்கும்.

அரவைத் திறன் 65 சதமாகவும், முழு அரிசி காணும் திறன் 62 சதமாகவும் இருக்கும்.

ஏ.டி.ட்டீ.57

இதன் வயது 115 நாட்கள்.

எக்டருக்கு 6,500 கிலோ நெல் மகசூல் கிடைக்கும்.

அரிசி, மத்திய சன்னமாக, வெள்ளை நிறத்தில் இருக்கும்.

அரவைத் திறன் 69 சதமாகவும், முழு அரிசி காணும் திறன் 60 சதமாகவும் இருக்கும்.

ஏ.டி.ட்டீ.56

இதன் வயது 110-115 நாட்கள்.

எக்டருக்கு 6,248 கிலோ நெல் மகசூல் கிடைக்கும்.

இலைச் சுருட்டுப்புழு மற்றும் ஆனைக்கொம்பன் தாக்குதலை முழுமையாகத் தாங்கி வளரும்.

புகையான், பச்சைத் தத்துப்பூச்சி, குலை நோய், பாக்டீரிய இலைக்கருகல் நோய், இலையுறைக் கருகல் நோய் ஆகியவற்றை மிதமாகத் தாங்கி வளரும்.

ஏ.டி.ட்டீ.59

இதன் வயது 110-115 நாட்கள்.

பயிர், நடுத்தர உயரத்தில் சாயாமல் இருக்கும்.

இது, ஏ.டி.ட்டீ.37க்கு மாற்று இரகமாகும்.

எக்டருக்கு 6,100 கிலோ மகசூல் கிடைக்கும்.

இலையுறைக் கருகல் மற்றும் துங்ரோ நோயை முற்றிலும் தாங்கி வளரும்.

பாக்டீரிய இலைக்கருகல், இலையுறை அழுகல் மற்றும் நெற்பழ நோயை மிதமாகத் தாங்கி வளரும்.

இட்லி செய்வதற்கு ஏற்றது.


முனைவர் சி.பானுமதி,

முனைவர் இரா.அகிலா, முனைவர் க.சிவகாமி, முனைவர் செ.தமிழ்ச்செல்வி, முனைவர் அ.புனிதா, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர், திருவள்ளூர் மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • வேலை வாய்ப்பைத் தரும் அசோலா!

  • மேலே மின்சார உற்பத்தி; கீழே பயிர் சாகுபடி!

  • முயல் மசால் சாகுபடி!

  • பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி!

  • கோடை உழவு கோடி நன்மை தரும்!

  • நாவற் பழங்களைக் கையாளும் முறைகள்!

  • சன்னல் ஓரத்தில் சத்துச் சுரங்கம்!

  • வேலி மசால் சாகுபடி!

  • அகத்திக்கீரை சாகுபடி!