இரண்டு சதவீத டிஏபி கரைசல் என்பது, ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் டிஏபி வீதம் கலந்து தயாரிக்கும் கலவை ஆகும். இந்தக் கலவையைப் பயறுவகைப் பயிர்களில் பூக்கும் காலத்திலும், அடுத்து 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.
இந்தக் கலவையைத் தெளிப்பதால், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் பயிருக்கு எளிதில் கிடைக்கும்.
இதனால் பயிரின் வளர்ச்சி தூண்டப்படும்.
பூக்கும் திறன் அதிகமாகும்.
பூக்கள் உதிர்தல் குறையும்.
மொத்தத்தில் பயிர் மகசூல் கூடும்.
வேளாண்மைத் துறை, தமிழ்நாடு அரசு
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



