My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மண் பரிசோதனையின் அவசியம்!

மண் பரிசோதனை

விளைநில மண்ணை ஏன் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்களை இங்கே பார்க்கலாம்.

இரசாயன உரங்களை அதிகமாக இடுவதைத் தடுக்கவும், சுற்றுச்சூழலைக் காக்கவும் மண் பரிசோதனை அவசியம்.

பயிர் அறுவடைக்குப் பிறகு மண்ணில் உள்ள சத்துகள் குறைந்து விடும். எனவே, ஆண்டுதோறும் மண்ணைச் சோதித்து, நிலவளத்தை அறிந்து கொள்ள மண் பரிசோதனை அவசியம்.

மண்ணரிப்பு, சத்துகள் ஆவியாதல் போன்றவற்றால், மண்வளம் குன்றி விடும். எனவே, போதியளவில் சத்துகளை நிலத்தில் இடுவதற்கு மண் பரிசோதனை அவசியம்.

பயிர் உற்பத்தி மற்றும் இலாபத்தைப் பெருக்க, மண் வளத்தை நிலை நிறுத்த வேண்டும். இதற்கு, மண் பரிசோதனை அவசியம்.

மண் வளத்தைக் காப்பதற்கு, தேவையான அளவில் அங்கக உரங்கள் மற்றும் இரசாயன உரங்களை இட வேண்டும். இந்த அளவுகளை அறிந்து கொள்ள மண் பரிசோதனை செய்ய வேண்டும்.

பயிரின் தேவை, மண்ணின் தன்மை, உரப்பயன்பாட்டுத் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உர நிர்வாகம் அமைய வேண்டும். இதற்கு மண் பரிசோதனை அவசியம்.

தேவையான நேரத்தில் மண் பரிசோதனை செய்வதன் மூலம், சரிவிகித, சம அளவு சத்துகளை இட்டு, பயிரின் உற்பத்தியைக் கூட்ட மண் பரிசோதனை அவசியம்.


வேளாண்மைத் துறை, தமிழ்நாடு அரசு


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • விவசாயிகளின் நண்பன் கரையான்!

  • பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?

  • பன்றிகளுடன் மீன் வளர்ப்பு!

  • பயிருக்கு அரணாகும் உயிர்வேலி!

  • கோழியின் எச்சம் சிறந்த இயற்கை உரம்!

  • தாய்க்கோழிகள் தேர்வு!

  • சுண்ணாம்பு மண் சீர்திருத்தம்!

  • புகையான் கட்டுப்பாடு!

  • ஆடு வளர்ப்பில் தீவனப் பராமரிப்பு!