My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

கறவை மாடுகள் சினைப் பிடிக்க உதவும் எளிய முறை!

கறவை மாடுகள்

றவை மாடுகள் சரியான காலத்தில் சினைப் பிடித்தால் தான் அவற்றின் பயனை நாம் முழுமையாக அனுபவிக்க முடியும். ஆனால், சில மாடுகள் பருவத்துக்கு வந்தாலும் சினைப் பிடிப்பதில்லை. இத்தகைய மாடுகள் சினைப் பிடிக்க என்ன செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

பருவத்துக்கு வந்த முதல் நாள் அல்லது இரண்டாம் நாளில் கீழ்க்கண்ட சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.

வெல்லம் மற்றும் உப்புடன், தினமும் ஒரு முள்ளங்கி வீதம் ஐந்து நாட்களுக்குத் தர வேண்டும்.

அடுத்து, வெல்லம் மற்றும் உப்புடன், தினமும் ஒரு சோற்றுக் கற்றாழை மடலை நான்கு நாட்களுக்குத் தர வேண்டும்.

அடுத்து, வெல்லம் மற்றும் உப்புடன், தினமும் கைப்பிடி முருங்கைக் கீரையை நான்கு நாட்களுக்குத் தர வேண்டும்.

அடுத்து, வெல்லம் மற்றும் உப்புடன், தினமும் கையளவு பிரண்டைத் தண்டை நான்கு நாட்களுக்குத் தர வேண்டும்.

நிறைவாக, வெல்லம் மற்றும் உப்புடன், தினமும் கையளவு கறிவேப்பிலை மற்றும் மஞ்சளைக் கலந்து நான்கு நாட்களுக்குத் தர வேண்டும்.


கால்நடைப் பராமரிப்புத் துறை, தமிழ்நாடு அரசு.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • விவசாயிகளின் நண்பன் கரையான்!

  • பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?

  • பன்றிகளுடன் மீன் வளர்ப்பு!

  • பயிருக்கு அரணாகும் உயிர்வேலி!

  • கோழியின் எச்சம் சிறந்த இயற்கை உரம்!

  • தாய்க்கோழிகள் தேர்வு!

  • சுண்ணாம்பு மண் சீர்திருத்தம்!

  • புகையான் கட்டுப்பாடு!

  • ஆடு வளர்ப்பில் தீவனப் பராமரிப்பு!