போரான் சத்துப் பற்றாக்குறை உள்ள நிலத்தில் நிலக்கடலையை சாகுபடி செய்து இருந்தால், அது நிலக்கடலை மகசூலைப் பெரியளவில் பாதிக்கும். எனவே, இதைச் சரி செய்வது முக்கியம்.
+ போரான் சத்துக்குறை இருந்தால், நிலக்கடலைச் செடியின் நுனி இலைகள் சிறுத்து, உருமாறி, தடித்து, மொரமொரப்பாக இருக்கும். நடுத்தண்டின் நுனிக் குருத்துக் கருகும்.
+ கடலைக் காய்களின் தோலில் கரும் புள்ளிகள் தோன்றும். பருப்புச் சிறுத்து விடும், பொக்குக் கடலைகள் அதிகமாகும்.
+ பருப்பை உடைத்துப் பார்த்தால், பருப்பின் நடுவில் குழிவான பழுப்பு நிறப் பள்ளங்கள் இருக்கும்.
+ விதையின் கருக்குருத்து பழுப்பு நிறமாக மாறிக் கருகி விடும். இதை, Hollow heart என்று சொல்வார்கள்.
சரி செய்தல்
+ போரான் சத்துக்குறை உள்ள நிலத்தில், எக்டருக்கு 10 கிலோ போராக்ஸ் வீதம் எடுத்து அடியுரமாக இட வேண்டும்.
+ ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் போராக்ஸ் வீதம் கலந்து, செடிகள் பூக்கும் போதும், காய்கள் பிடிக்கும் போதும், 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



