தேவையான பொருள்கள்: கோமியம் – 15 லிட்டர், புகையிலை – அரைக்கிலோ, பச்சை மிளகாய் – அரைக்கிலோ, வேப்பிலை – 5 கிலோ, மண்பானை – 1
அக்னி அஸ்திரம் தயாரிப்பு முறை
+ கோமியம், புகையிலை, பச்சை மிளகாய், வேப்பிலை ஆகியவற்றை, மண்பானையில் போட்டு, நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். நான்கு முறை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும்.
+ அடுத்து, பானையின் வாயில் துணியைக் கட்டி, 48 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.
+ அடுத்து, துணியை நீக்கி விட்டு, நீரின் மேல் ஏடு போல் படிந்துள்ள ஆடையை நீக்கி விட்டால் அக்னி அஸ்திரம் தயார்.
+ இந்தக் கரைசலை மூன்று மாதங்கள் வரை, புட்டியில் சேமித்து வைத்து, 10 லிட்டர் நீருக்கு 500 மி.லி. வீதம் கலந்து பயிர்களில் தெளிக்கலாம்.
பயன்கள்
+ தண்டுத் துளைப்பான், காய்ப்புழு மற்றும் அதிகப் பனி, அதிக வெய்யில் காலங்களில் பயிர்களைத் தாக்கும் கொள்ளை நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
+ பயிரோ நோயோ வந்த பிறகு தெளிப்பதை விட, பூக்கள் பூக்கும் போது தேமோர்க் கரைசல் அல்லது அரப்பு மோர்க் கரைசலைத் தெளித்து ஒரு வாரம் கழித்து அக்னி அஸ்திரத்தைத் தெளித்தால், காய்ப்புழு மற்றும் தண்டுத் துளைப்பான் கட்டுப்படும்.
முனைவர் வி.அ.விஜயசாந்தி, முனைவர் செ.தமிழ்ச்செல்வி, முனைவர் சி.பானுமதி, முனைவர் இரா.அகிலா, முனைவர் க.சிவகாமி, முனைவர் அ.புனிதா, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர், திருவள்ளூர் – 602 025.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



