இயற்கை வேளாண்மை மற்றும் சூழல் மேலாண்மையை வலியுறுத்தி, பச்சை பூமி மாத இதழ், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த இதழ் நடத்தும் pachaiboomi.net என்னும் இந்த இணையதளத்திற்கு, தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவில் வாசகர்கள் உள்ளனர். இதில், உங்கள் அருகில் நடக்கும் வேளாண் நிகழ்வுகளையும் வெளியிடலாம்.
வேளாண்மை மட்டுமின்றி, கால்நடை வளர்ப்பு, சுற்றுச்சூழல் சார்ந்த நிகழ்வுகளையும், தகுந்த நிழற்படங்கள், வீடியோக்களுடன் அனுப்பி வைக்கலாம். அதன் உண்மை-தன்மைகள் சரிபார்க்கப்பட்டு உடனுக்குடன் வெளியிடப்படும். மேலும், விவசாயிகள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகள், பயிற்சிகள் குறித்த முன்னறிவிப்புகளையும் பச்சை பூமி வாயிலாக, விவசாயிகளுக்குத் தெரிவிக்க முடியும்.
அத்துடன், வேளாண்மை, கால்நடை வளர்ப்பில், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும், தங்களுக்குத் தெரிந்தவர்கள் பற்றிய விவரத்தையும் தெரிவிக்கலாம். அவர்களை நேர்காணல் செய்து, செய்தியாக வெளியிட பச்சை பூமி காத்திருக்கிறது. மரம் வளர்ப்பு, மழை நீர் சேகரிப்புப் போன்ற, சுற்றுச்சூழல் மேம்பாட்டை வலியுறுத்தும் சமூக ஆர்வலர்களையும் போற்றுவதற்குப் பச்சை பூமி தயாராக இருக்கிறது.
தகவல்களை அனுப்ப:
மின்னஞ்சல்: news@pachaiboomi.net



