My page - topic 1, topic 2, topic 3

கால்நடைகளைத் தாக்கும் காசநோய்!

கால்நடைகளைத் தாக்கும் காசநோய்!

காசநோய் மைக்கோ பாக்டீரியம் ட்யூபர்குளோஸிஸ் என்னும் நுண்ணுயிர்க் கிருமியால் ஏற்படுகிறது. இக்கிருமிகள், மாடுகளைப் பாதிப்பதோடு மனிதர்களையும் பாதிக்கின்றன. இந்நோயக் கிருமிகள், நோயுற்ற பசுவின் பாலை அருந்துவதாலும், மாட்டோடு நெருங்கிப் பராமரிப்பதாலும் மக்களுக்கும் பரவுகின்றன.

காசநோய் அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட மாடுகளில் விட்டு விட்டு லேசான காய்ச்சல் இருக்கும். மாடுகள் மிகவும் இளைத்து மெலிந்து காணப்படும். தொடர்ந்து உடல் எடை குறையும். இருமல், மூச்சுத் திணறல் ஏற்படும். மார்பிலுள்ள நிணநீர் முடிச்சு வீங்கி விடுவதால் அடிக்கடி வயிற்று உப்புசம் ஏற்படும். குடற்பகுதி பாதிக்கப்பட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

மடி பாதிக்கப்பட்டால் மடியின் மேல்பாகம் அதிக கெட்டித் தன்மையை அடைந்து விடும். பாலின் தன்மையும் கெட்டுப் போகும். பாதிக்கப்பட்ட மாடுகள், நோய் கண்ட சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை அவதிப்பட்டு இறந்து விடும்.

தடுப்பு முறைகள்

தொடர்ந்து இளைத்துக் கொண்டே வரும் மாடுகளின் தோலில் ட்யூபர்குளின் சோதனைக்கு உட்படுத்தி காசநோய் உள்ளதா என்பதை அறிய வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை, மாடுகளைக் காசநோய் சோதனைக்கு உட்படுத்தி, நோயுற்ற மாடுகளைப் பிரித்து அப்புறப்படுத்த வேண்டும்.

நோயுற்ற மாடுகளைப் புதிதாகப் பண்ணையில் சேர்க்கக் கூடாது. மூன்று மாத வயதுள்ள கன்றுக் குட்டிகளையும் ட்யூபர்குளின் சோதனைக்கு உட்படுத்தி, காசநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும்.


PB_DEVAKI

முனைவர் .தேவகி,

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

முனைவர் ப.இரா.நிஷா, வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம். முனைவர் கா.செந்தில் குமார், முதுகலை கால்நடை அறிவியல் ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

உங்கள் கருத்து?

மேலும் படிக்கலாம்:

  • தேசிய விவசாயிகள் தினம் 2025!

  • பாம்புக் கடி – தப்பும் முறைகள்!

  • பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

  • களர், உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

  • விவசாயிகள் செய்வதற்கு ஏற்ற துணைத் தொழில்கள்!

  • செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

  • இயற்கை வேளாண்மை பாரதத்துக்குச் சொந்தமானது! – பிரதமர் நரேந்திர மோடி சூளுரை!

  • ஜப்பானிய காடைகள்!

  • வறட்சிக்கு ஏற்ற வளமான நெல்லி!