My page - topic 1, topic 2, topic 3

சிக்கனப் பாசனமே சிறந்தது!

சிக்கனப் பாசனமே சிறந்தது!

கோடைக்காலம் தொடங்கி விட்டது. போதுமான அளவு பெய்யாமல் பருவ மழை பொய்த்துப் போனதால் இந்தாண்டு வெய்யிலின் தாக்கமும் அதிகமாகவே இருக்கும்.

கடுமையான வறட்சியைச் சந்திக்க வேண்டும். குடிநீர்ப் பஞ்சம் தலை தூக்கும். வேளாண்மைக்குத் தேவையான நீர் கிடைக்காது. கால்நடைகளுக்கு வேண்டிய தீவனத்தில் தட்டுப்பாடு ஏற்படும்.

தமிழக மக்கள், தாங்கள் சார்ந்துள்ள மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டுமென்று இப்போதே அரசிடம் கோரிக்கை வைக்கத் தொடங்கி விட்டனர்.

இந்தக் கோடைக் காலத்தைச் சமாளிப்பது என்பது அனைவருக்கும் ஒரு சவாலாகவே இருக்கும்.

எனவே, இருக்கும் நீரைக் குடிப்பதற்கும் சரி, பாசனத்துக்கும் சரி, சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

தெருக் குழாய்களில் சரியான மூடிகளின்றிக் குடிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும்.

விளைச்சலுக்கு அதிகளவு நீரை எடுத்துக் கொள்ளாத பயிர்களைப் பயிரிட வேண்டும்.

வாய்க்கால் வழிப் பாசன முறையைக் கைவிட்டு விட்டுக் குழாய் வழிப் பாசன முறைகளைக் கையாள வேண்டும்.

இப்போது மட்டுமல்ல, எப்போதும் சொட்டுநீர்ப் பாசனம் போன்ற சிக்கனப் பாசன முறைகளைக் கடைப்பிடித்தல், நீரை மிச்சப்படுத்தி விளைச்சலைப் பெருக்கலாம்.


2011 மே இதழில் வெளியான ஆசிரியர் பக்கம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • உழவர்களைக் கரை சேர்க்கும் கலப்புப் பண்ணையம்!

  • ஒருங்கிணைந்த பண்ணையம் அவசியம்!

  • மழைநீர் தானே நிலத்தடி நீர்; இதை மறந்தால் வருமா குடித்திட நீர்?

  • சினைப்படாத மாடுகள் மூலிகை மருத்துவம் மூலம் சினைப்படும்!

  • கிராமத்து உயிர்களின் நடமாட்டம் இருக்க வேண்டும்!

  • மரமே மழைக்கு உறவாம்; அந்த மரமிருந்தால் தான் மழை வருமாம்!

  • கயலும் வளர்க்கலாம், முயலும் வளர்க்கலாம்..!

  • செலவில்லாத இயற்கை வேலியை அமைப்போம்!

  • நீர் இருப்பை அறிந்து விவசாயம் செய்ய வேண்டும்!