My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

நதிப் பள்ளத்தாக்குத் திட்டம்!

நதிப் பள்ளத்தாக்குத் திட்டம்

நதிப் பள்ளத்தாக்குத் திட்டம் – நோக்கங்கள்

பல்நோக்கு நீர்த் தேக்கங்களில் வண்டல் மண் படிவதைக் குறைக்கும் வகையில், நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மண்ணரிப்பைத் தடுத்தல்.

நீர்வடிப் பகுதி மேலாண்மை மூலம், நீர்ப் பிடிப்புப் பகுதி நிலங்களின் தரம் குறையாமல் தடுத்தல்.

நீர்வடிப் பகுதிகளில் உள்ள நிலங்களின் தரம் மற்றும் ஈரப்பதத்தை மேம்படுத்துதல்.

நிதி ஆதாரம்

மத்திய அரசு 60 சதம், மாநில அரசு 40 சதம்.

மானியங்களும் சலுகைகளும்

மண்வளப் பாதுகாப்புப் பணிகளை, 100 சத மானியத்தில், சமுதாய நிலங்களில் செயல்படுத்துதல்.

தனிப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு, 50 சதம் மானியம் வழங்குதல்.

திட்டப் பகுதி

கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள தென் பெண்ணையாறு மற்றும் மேட்டூர் நீர்ப்பிடிப்புப் பகுதிகள்.

செயல்படுத்தப்படும் பணிகள்

ஓடைப் பராமரிப்புப் பணிகள்.

நீர்ச் சேகரிப்புக் கட்டுமானங்கள்.

நில மேம்பாட்டுப் பணிகள்.

தகுதி

தென் பெண்ணையாறு மற்றும் மேட்டூர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட, நீர்வடிப் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகள்.

அணுக வேண்டிய அலுவலர்

சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மை உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு அரசு.


தமிழக வேளாண்மைப் பொறியியல் துறை.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!

  • பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம்!

  • சூரிய மின்வேலி அமைக்க மானியம்!

  • விதை விற்பனை உரிமம் பெறுவதற்கான விதிமுறைகள்! 

  • மீனவர்களுக்காக இராமேஸ்வரம் கடலில் இறால் வளர்ப்புத் திட்டம்!

  • அரசின் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு!

  • பண்ணைக் குட்டை அமைக்க நூறு சதம் மானியம்!

  • பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

  • தஞ்சாவூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!