My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


விவசாயிகள் சொந்தமாக நிலம் வாங்க உதவும் நன்னிலம் திட்டம்!

நன்னிலம் திட்டம்

மிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் நன்னிலம் என்ற திட்டத்தின் மூலம், நிலமற்ற விவசாயிகள், சொந்தமாக நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம். 

நன்னிலம் திட்டம்

  • ஆதி திராவிட நலத் துறையின் தாட்கோ நிறுவனம் மூலம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

  • ஆதி திராவிட சமூகப் பெண்களுக்கு முன்னுரிமை; பெண்கள் இல்லாத குடும்பங்களில் ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

  • வயது வரம்பு: 18 – 55 ஆண்டுகள்.

  • குடும்ப ஆண்டு வருமானம் ₹3 இலட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

  • அதிகபட்சக் கடன் 10 லட்சம் ரூபாய்; அதில் 5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.

  • நிலம் வாங்குபவர்களுக்கு 100% முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டண விலக்கு.

  • அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்க முடியும்.

  • கிணறு, பம்ப் செட், சொட்டு / சுழற்சி நீர்ப்பாசனம் போன்ற வசதிகளுக்கும் மானியம்.

  • மின் இணைப்பு பெற 75,000 ரூபாய் வரை அரசே செலுத்தும்.

  • நிலம் வாங்கிய பிறகு 20 ஆண்டுகள் வரை விற்பனை செய்யக் கூடாது; முடியாது.

விண்ணப்பிக்க வேண்டிய இடங்கள்

  • தாலுகா அலுவலகம்
  • மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
  • தாட்கோ அலுவலகம் அல்லது தாட்கோவின் இணையதளம் tahdco.com
விளம்பரம்:


தகுதியானவர்கள், இத்திட்டத்தைப் பயன்படுத்தி சொந்தமாக நிலம் வாங்கிப் பயன்பெறலாம்.


தாட்கோ

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்:


படிக்கலாம்: