கார் நெல்லின் வயது 120-130 நாட்கள். 155 செ.மீ. உயரம் வளரும். கார் பட்டத்தில் பயிரிடலாம்.
நாற்றுகள் வேர்ப் பிடித்து வளர்ந்து விட்டால் பெரு வெள்ளத்தில் மூழ்கினாலும், பயிர் அழுகாது. நீருக்குள்ளேயே வளர்ந்து, பால் பிடித்து, முதிர்ந்து விளைந்து விடும். நீருக்குள் இருந்தாலும் நெல் முளைக்காது. நீர் வற்றிய பின் அறுவடை செய்யலாம். எக்டருக்கு ஆறு டன் மகசூல் கிடைக்கும்.
நெல், வக்கோல் நிறத்தில் மோட்டாவாக இருக்கும். அரிசி, பழுப்பு நிறத்தில் இருக்கும். அவல் செய்ய உகந்தது. உடலுக்குச் சத்தையும், பலத்தையும் தரும். நீரிழிவு, வாதநோய் மற்றும் தோல் நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


