My page - topic 1, topic 2, topic 3

கொட்டில் முறையில் வான்கோழி வளர்ப்பு!

கொட்டில் முறையில் வான்கோழி வளர்ப்பு!

கொட்டில் முறையில் வான் கோழிகளின் உற்பத்தித் திறன் அதிகமாகும். மேலும், நோய்த் தடுப்பும், நல்ல மேலாண்மை முறையும் இதில் சாத்தியம்.

இம்முறையில், மழை, வெய்யில், காற்று, எதிரி விலங்குகள் ஆகியவற்றிடம் இருந்து வான் கோழிகளுக்குப் பாதுகாப்புக் கிடைக்கும்.

வெய்யில் அதிகமாக உள்ள பகுதிகளில் கொட்டிலின் நீளவாட்டம், கிழக்கு மேற்காக இருக்க வேண்டும்.

இரண்டு கொட்டிலுக்கு இடையில் குறைந்தது இருபது மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

குஞ்சுகள் வளரும் கொட்டில், வளர்ந்த கோழிகள் வளரும் கொட்டிலில் இருந்து குறைந்தது 50-100 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும்.

கொட்டிலின் அகலம் ஒன்பது மீட்டருக்கு மேல் இருக்கக் கூடாது. உயரம், தரையில் இருந்து 2.6-3.3 மீட்டர் இருக்கலாம்.

கொட்டிலின் கூரை, பக்கச் சுவரிலிருந்து ஒரு மீட்டர் அளவுக்கு வெளியே நீட்டியிருக்க வேண்டும். இதனால், மழைச்சாரல் கொட்டிலுக்குள் செல்வது தடுக்கப்படும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

கொட்டிலின் தரை, ஈரத்தை உறிஞ்சாத கான்கிரீட் தரையாக இருக்க வேண்டும்.

ஆழ்கூளத் தரையில் வான் கோழிகளை வளர்க்கும் போது, முட்டைக் கோழிகளைப் பராமரிக்கும் முறைகளைக் கையாள வேண்டும்.

போதுமான தங்குமிடம், நீர், தீவனத் தட்டுகளுக்குத் தகுந்த இடவசதி இருக்க வேண்டும்.


கொட்டில் முறையில் வான்கோழி வளர்ப்பு!

மரு.ச.இளவரசன்,

உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • தேசிய விவசாயிகள் தினம் 2025!

  • பாம்புக் கடி – தப்பும் முறைகள்!

  • பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

  • களர், உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

  • விவசாயிகள் செய்வதற்கு ஏற்ற துணைத் தொழில்கள்!

  • செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

  • இயற்கை வேளாண்மை பாரதத்துக்குச் சொந்தமானது! – பிரதமர் நரேந்திர மோடி சூளுரை!

  • ஜப்பானிய காடைகள்!

  • வறட்சிக்கு ஏற்ற வளமான நெல்லி!