மீன் அல்லது கீரை அல்லது புளிப்புள்ள பழத்துடன், பாலைப் பருகக் கூடாது.
வாழைப் பழம் அல்லது கோழிக்கறி அல்லது இறைச்சி வகைகளுடன், தயிரைச் சாப்பிடக் கூடாது.
நெய், தேன், எண்ணெய், நீர் ஆகிய இந்தப் பொருள்களில், இரண்டு அல்லது மூன்று பொருள்களைச் சம அளவில் எடுத்துச் சாப்பிடக் கூடாது.
முள்ளங்கியுடன் உளுந்து சார்ந்த உணவுகளை உண்ணக் கூடாது.
மணத்தக்காளியுடன், திப்பிலி, மிளகு, தேன், வெல்லம் ஆகியவற்றைச் சேர்க்கக் கூடாது.
மீன் அல்லது இறைச்சி வகைகளைப் பொரிக்கப் பயன்படுத்திய எண்ணெய்யை, மீண்டும் உணவில் பயன்படுத்தக் கூடாது.
வெற்றிலையுடன் எண்ணெய்யைச் சேர்த்து உண்ணக் கூடாது.
மதுவுடன் சர்க்கரையைச் சேர்த்து உண்ணக் கூடாது.
கரும்பைத் தின்றதும் நீரைக் குடிக்கக் கூடாது.
தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தாம்பரம் சானட்டோரியம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



