தேவையான பொருள்கள்: நொச்சி இலை 10 கிலோ, வேப்பிலை 3 கிலோ, புளிய இலை 2 கிலோ, கோமியம் 10 லிட்டர், மண்பானை 1.
பிரம்மாஸ்திரம் தயாரிப்பு முறை
நொச்சி இலை, வேப்பிலை, புளிய இலை ஆகியவற்றை மண்பானையில் இட்டு கோமியத்தை ஊற்றி, நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். நான்கு முறை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு, பானையின் வாயில் துணியைக் கட்டி, 48 மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.
அடுத்து, துணியை நீக்கி விட்டு, நீரின் மேல் ஏடு போல் படிந்துள்ள ஆடையை நீக்கி விட்டால் பிரம்மாஸ்திரம் தயார்.

முனைவர் வி.அ.விஜயசாந்தி,
முனைவர் செ.தமிழ்ச்செல்வி, முனைவர் சி.பானுமதி, முனைவர் இரா.அகிலா, முனைவர் க.சிவகாமி, முனைவர் அ.புனிதா, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர், திருவள்ளூர் – 602 025.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



