இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடிப் பகுதியில் வரப்புக் குடஞ்சான் நெல் விளைகிறது.
மானாவாரிக்கு ஏற்றது. வறட்சியைத் தாங்கி உயரமாக வளரும். நெல் கறுப்பாகவும், அரிசி சிவப்பாகவும் இருக்கும். சோறும் கஞ்சியும் சுவையாக இருக்கும். சோறு 2-3 நாட்கள் கெடாமல் இருக்கும்.
இந்தச் சோறு வேலை செய்யும் ஆற்றலைத் தருவதாக விவசாயிகள் நம்புகின்றனர். வைக்கோலும் அதிகமாகக் கிடைக்கும்.
மூன்று மாதங்களில் விளையும். புரட்டாசி மத்தியில் (செப்டம்பர்) விதைக்கப்படும் இந்நெல், தை மாதம் (ஜனவரி) அறுவடைக்கு வரும்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


