மண்வளத்தை மேம்படுத்தவும், மண்ணரிப்பைக் குறைக்கவும், களைகள் மற்றும் பிற பூச்சிகளைக் குறைக்கவும், இரண்டு சாகுபடிப் பருவங்களுக்கு இடையில், சாகுபடி செய்யப்படும் பயிர்கள், மூடுபயிர்கள் ஆகும்.
இவை, ஒளி, இடம், நீர் மற்றும் சத்துக்காக, களைகளுடன் போட்டியிட்டு, களைகளின் வளர்ச்சியைக் கட்டுப் படுத்துகின்றன.
ஒரு பயிர்ப் பருவம் முடிவுற்ற பிறகு, இந்த மூடுபயிர், மண்ணின் மேற்பரப்பை மூடிக் கொள்வதால், களை முளைப்புத் தடை செய்யப் படுகிறது.
மேலும், களைக் கொல்லிக்குக் கட்டுப்படாத களைச் செடிகளைக் குறைப்பதன் மூலம், மூடுபயிர்கள் ஒருங்கிணைந்த களை மேலாண்மையில் முக்கியப் பங்காற்று கின்றன.
மூடுபயிராக இடப்படும் தட்டைப் பயறு, ஒரு எக்டர் நிலத்தில், 30-40 கிலோ தழைச் சத்தை நிலை நிறுத்துகிறது.
மூடுபயிராக இடப்படும் சோயா மொச்சை, ஒரு எக்டர் நிலத்தில், 50-150 கிலோ தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது.
மூடுபயிராக இடப்படும் கொண்டைக் கடலை, ஒரு எக்டர் நிலத்தில், 24-84 கிலோ தழைச் சத்தை நிலை நிறுத்துகிறது.
மூடுபயிராக இடப்படும் பச்சைப் பயறு, ஒரு எக்டர் நிலத்தில், 71-112 கிலோ தழைச் சத்தை நிலை நிறுத்துகிறது.
மூடுபயிராக இடப்படும் துவரை, ஒரு எக்டர் நிலத்தில், 150-280 கிலோ தழைச் சத்தை நிலை நிறுத்துகிறது.
இயக்குநர்,
மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



