My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மூடுபயிராக இடப்படும் பயறுவகைப் பயிர்களின் நன்மைகள்!

மூடுபயிராக இடப்படும் பயறுவகைப் பயிர்களின் நன்மைகள்!

ண்வளத்தை மேம்படுத்தவும், மண்ணரிப்பைக் குறைக்கவும், களைகள் மற்றும் பிற பூச்சிகளைக் குறைக்கவும், இரண்டு சாகுபடிப் பருவங்களுக்கு இடையில், சாகுபடி செய்யப்படும் பயிர்கள், மூடுபயிர்கள் ஆகும்.

இவை, ஒளி, இடம், நீர் மற்றும் சத்துக்காக, களைகளுடன் போட்டியிட்டு, களைகளின் வளர்ச்சியைக் கட்டுப் படுத்துகின்றன.

ஒரு பயிர்ப் பருவம் முடிவுற்ற பிறகு, இந்த மூடுபயிர், மண்ணின் மேற்பரப்பை மூடிக் கொள்வதால், களை முளைப்புத் தடை செய்யப் படுகிறது.

மேலும், களைக் கொல்லிக்குக் கட்டுப்படாத களைச் செடிகளைக் குறைப்பதன் மூலம், மூடுபயிர்கள் ஒருங்கிணைந்த களை மேலாண்மையில் முக்கியப் பங்காற்று கின்றன.

மூடுபயிராக இடப்படும் தட்டைப் பயறு, ஒரு எக்டர் நிலத்தில், 30-40 கிலோ தழைச் சத்தை நிலை நிறுத்துகிறது.

மூடுபயிராக இடப்படும் சோயா மொச்சை, ஒரு எக்டர் நிலத்தில், 50-150 கிலோ தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது.

மூடுபயிராக இடப்படும் கொண்டைக் கடலை, ஒரு எக்டர் நிலத்தில், 24-84 கிலோ தழைச் சத்தை நிலை நிறுத்துகிறது.

மூடுபயிராக இடப்படும் பச்சைப் பயறு, ஒரு எக்டர் நிலத்தில், 71-112 கிலோ தழைச் சத்தை நிலை நிறுத்துகிறது.

மூடுபயிராக இடப்படும் துவரை, ஒரு எக்டர் நிலத்தில், 150-280 கிலோ தழைச் சத்தை நிலை நிறுத்துகிறது.


இயக்குநர்,

மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!

  • மரவள்ளியைத் தாக்கும் சிலந்திப் பூச்சி!

  • தேசிய விவசாயிகள் தினம் 2025!

  • பாம்புக் கடி – தப்பும் முறைகள்!

  • பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

  • களர், உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

  • விவசாயிகள் செய்வதற்கு ஏற்ற துணைத் தொழில்கள்!

  • செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

  • இயற்கை வேளாண்மை பாரதத்துக்குச் சொந்தமானது! – பிரதமர் நரேந்திர மோடி சூளுரை!