My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மாசிப் பட்டத்தில் இறவையில் எள் சாகுபடி!

மாசிப் பட்டத்தில் இறவையில் எள் சாகுபடி!

ள், மிகச் சிறிய விதை என்பதால், நிலத்தை நன்கு உழ வேண்டும்.

எக்டருக்கு 5 கிலோ விதைகள் தேவைப்படும். இவற்றை 15 கிலோ மணலில் கலந்து விதைக்கலாம்.

இறவை எள் சாகுபடிக்கு, 10 சதுர மீட்டர் அல்லது 20 சதுர மீட்டர் பரப்பில் படுக்கைகளை அமைக்க வேண்டும்.

இந்தப் படுக்கைகள் குழியேதும் இல்லாமல், நீர்த் தேங்காத வகையில் இருக்க வேண்டும்.

பயிர் இடைவெளி 30×30 செ.மீ. அளவில் இருக்க வேண்டும்.

எக்டருக்கு 12.5 கிலோ டி.என்.ஏ.யூ. நுண்ணுரக் கலவை வீதம் எடுத்து, செறிவூட்டிய தொழுவுரத்தில் கலந்து நிலத்தில் இட வேண்டும்.

மாங்கனீசு சத்துக் குறையைப் போக்க, எக்டருக்கு 10 கிலோ மாங்கனீசு சல்பேட் வீதம் எடுத்து, 45 கிலோ மணலில் கலந்து இட வேண்டும்.

எக்டருக்கு 35:23:23 கிலோ, தழை, மணி, சாம்பல் சத்தை நிலத்தில் இட வேண்டும்.

செடிகள் பூக்கும் போதும், அதைத் தொடர்ந்து 10 நாட்கள் கழித்தும், ஒரு சதவீத டிஏபி கரைசலைத் தெளிக்க வேண்டும்.

25 மற்றும் 45 நாளில் களையெடுக்க வேண்டும்.

செடியின் அடியிலிருந்து மேலேயுள்ள காயில் விதைகள் கறுப்பாக வந்ததும் அறுவடை செய்ய வேண்டும்.

எக்டருக்கு, 650 முதல் 750 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.


செய்தி: இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!

  • மரவள்ளியைத் தாக்கும் சிலந்திப் பூச்சி!

  • தேசிய விவசாயிகள் தினம் 2025!

  • பாம்புக் கடி – தப்பும் முறைகள்!

  • பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

  • களர், உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

  • விவசாயிகள் செய்வதற்கு ஏற்ற துணைத் தொழில்கள்!

  • செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

  • இயற்கை வேளாண்மை பாரதத்துக்குச் சொந்தமானது! – பிரதமர் நரேந்திர மோடி சூளுரை!