My page - topic 1, topic 2, topic 3

மாவுப் பூச்சிக் கட்டுப்பாடு!

மாவுப் பூச்சிக் கட்டுப்பாடு!

ருங்கிணைந்த பூச்சி நிர்வாக முறைகளால் மட்டுமே மாவுப் பூச்சிகளை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும்.

பயிர்களைத் தொடர்ந்து கவனித்து வர வேண்டும். ஓரிரு செடிகளில் மாவுப் பூச்சிகள் தெரியும் போதே கைவினை முறையில்,

அந்தச் செடிகளை அல்லது செடிகளில் தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றித் தீயிட்டு எரிக்க வேண்டும்.

மரவள்ளி, மல்பெரி நடவுக்கு, மாவுப் பூச்சிகள் தாக்காத கரணைகளைத் தெரிவு செய்ய வேண்டும்.

மாவுப் பூச்சிகள் தாக்கும் சூழல் இருப்பின், விதைக் கரணைகளை 2 சத மாலத்தியான் பூச்சிக்கொல்லி மருந்துக் கரைசலில் நனைத்து நட வேண்டும்.

மாவுப் பூச்சிகளின் தங்குமிடமாக விளங்கும் பயிர்களுக்கு இடமில்லா வகையில், களைகள் இல்லாமல் நிலத்தைச் சுத்தமாக வைக்க வேண்டும்.

பயிருள்ள நிலத்துக்கு அருகில் மாவுப் பூச்சிகள் தாக்கிய பப்பாளி, கொய்யா, களைச் செடிகள் இருந்தால், அவற்றை முன்கூட்டியே அகற்றி விட வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மாவுப் பூச்சிகள் தாக்கிய நிலத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடாமல் இருந்தால், கால்நடைகள் மூலம் மாவுப் பூச்சிகள் பரவுவதைத் தடுக்கலாம்.

அனாசியஸ் பம்பவாலே, புரோமேர்சிடா அன்பேசியாடி வென்ரிஸ், ஹைப்ப ராஸ்பிஸ் மன்ரோனி, ஸ்கிம்னஸ் நுபிலஸ் ஆகிய

இயற்கை ஒட்டுண்ணிகளில் ஒன்றை, எக்டருக்கு பத்தாயிரம் வீதம் விடுவதன் மூலம், பருத்தியைத் தாக்கும் மாவுப் பூச்சிகளை, உயிரியல் முறையில் கட்டுப்படுத்த முடியும்.


தொகுப்பு: பசுமை


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • தேசிய விவசாயிகள் தினம் 2025!

  • பாம்புக் கடி – தப்பும் முறைகள்!

  • பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

  • களர், உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

  • விவசாயிகள் செய்வதற்கு ஏற்ற துணைத் தொழில்கள்!

  • செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

  • இயற்கை வேளாண்மை பாரதத்துக்குச் சொந்தமானது! – பிரதமர் நரேந்திர மோடி சூளுரை!

  • ஜப்பானிய காடைகள்!

  • வறட்சிக்கு ஏற்ற வளமான நெல்லி!