My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உவர் மண்ணை நல்ல மண்ணாக்கும் வங்காரவச்சி!

உவர் மண்ணை நல்ல மண்ணாக்கும் வங்காரவச்சி!

மிழில், ஓர் பூடு, வங்காரவச்சி என்று கூறப்படும் கீரை வகையின் தாவரப் பெயர், செசுவியம் போர்டுள கேஸ்ட்ரம் (Sesuvium portulacastram) ஆகும்.

இது, எய்சோயேசியே (Aizoaceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதை ஆங்கிலத்தில் Sea pursiane என்று கூறுவர்.

இந்த ஓர் பூடு அல்லது வங்காரவச்சி என்பது, உப்பு மண்ணில் வளரும் கீரை வகைச் செடியாகும்.

இதை, உப்பு மற்றும் ஆலைக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட மண்ணைச் சீர்திருத்தப் பயன்படுத்தலாம்.

இது, தண்டுகள் மூலம் பயிரிடப்படுகிறது.

ஒரு எக்டருக்குத் தேவையான நாற்றுகளை, 15 சென்ட் நாற்றங்காலில், 5×5 செ.மீ. இடைவெளியில் பயிரிட்டுத் தயார் செய்யலாம்.

பிறகு, 20×20 செ.மீ. இடைவெளியில் நடவு செய்து, 90 நாட்களில், 5 டன் பயிர்ப் பகுதிகளைப் பெறலாம்.

இதன் மூலம் உவர் தன்மையைச் சரி செய்யலாம். இவ்வகையில், ஒரு எக்டரில் உள்ள 157 கிலோ உப்பை அகற்றலாம்.

மேலும் விவரங்களுக்கு, கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும், சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவரை, 0422- 6611252 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


செய்தி: இயக்குநர்,

மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!

  • மரவள்ளியைத் தாக்கும் சிலந்திப் பூச்சி!

  • தேசிய விவசாயிகள் தினம் 2025!

  • பாம்புக் கடி – தப்பும் முறைகள்!

  • பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

  • களர், உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

  • விவசாயிகள் செய்வதற்கு ஏற்ற துணைத் தொழில்கள்!

  • செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

  • இயற்கை வேளாண்மை பாரதத்துக்குச் சொந்தமானது! – பிரதமர் நரேந்திர மோடி சூளுரை!