தமிழில், ஓர் பூடு, வங்காரவச்சி என்று கூறப்படும் கீரை வகையின் தாவரப் பெயர், செசுவியம் போர்டுள கேஸ்ட்ரம் (Sesuvium portulacastram) ஆகும்.
இது, எய்சோயேசியே (Aizoaceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதை ஆங்கிலத்தில் Sea pursiane என்று கூறுவர்.
இந்த ஓர் பூடு அல்லது வங்காரவச்சி என்பது, உப்பு மண்ணில் வளரும் கீரை வகைச் செடியாகும்.
இதை, உப்பு மற்றும் ஆலைக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட மண்ணைச் சீர்திருத்தப் பயன்படுத்தலாம்.
இது, தண்டுகள் மூலம் பயிரிடப்படுகிறது.
ஒரு எக்டருக்குத் தேவையான நாற்றுகளை, 15 சென்ட் நாற்றங்காலில், 5×5 செ.மீ. இடைவெளியில் பயிரிட்டுத் தயார் செய்யலாம்.
பிறகு, 20×20 செ.மீ. இடைவெளியில் நடவு செய்து, 90 நாட்களில், 5 டன் பயிர்ப் பகுதிகளைப் பெறலாம்.
இதன் மூலம் உவர் தன்மையைச் சரி செய்யலாம். இவ்வகையில், ஒரு எக்டரில் உள்ள 157 கிலோ உப்பை அகற்றலாம்.
மேலும் விவரங்களுக்கு, கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும், சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவரை, 0422- 6611252 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
செய்தி: இயக்குநர்,
மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



