My page - topic 1, topic 2, topic 3

மஞ்சளில் உர நிர்வாகம்!

மஞ்சளில் உர நிர்வாகம்!

ஞ்சளில் நல்ல மகசூலைப் பெற, முறையான உரமிடல் அவசியம். அடியுரமாக ஏக்கருக்கு 80 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 22 கிலோ யூரியா, 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 12 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை, பார்களை அமைப்பதற்கு முன்பு இட வேண்டும். பார்களை அமைத்த பிறகு, 12 கிலோ பெரஸ் சல்பேட், 6 கிலோ துத்தநாக சல்பேட்டை, பார்களின் மீது தூவிவிட வேண்டும்.

அசோஸ் பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை, ஏக்கருக்கு 4 கிலோ வீதம் எடுத்து, நிலத்தில் ஈரம் இருக்கையில் தூவிவிட வேண்டும். நடவு செய்த 30, 60, 90 மற்றும் 120 நாளில், ஏக்கருக்கு 22 கிலோ யூரியா மற்றும் 12 கிலோ பொட்டாசை இட வேண்டும்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், மஞ்சள் பயிருக்கென்று தனி நுண்ணுரக் கலவையைத் தயாரித்து வழங்கி வருகிறது.

ஐஐஎஸ்ஆர் பவர் மிக்ஸ் எனப்படும் இந்த நுண்ணுரக் கலவையை, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் வீதம் எடுத்து, நடவு செய்த 60 மற்றும் 90 நாளில் இலைகளில் தெளிப்பதன் மூலம், நுண்ணுரக் குறையைப் போக்கி, 10-15 சதம் கூடுதல் மகசூல் பெறலாம். மேலும், கிழங்குகளின் தரமும் நன்றாக இருக்கும்.


தொகுப்பு: பசுமை


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • தேசிய விவசாயிகள் தினம் 2025!

  • பாம்புக் கடி – தப்பும் முறைகள்!

  • பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

  • களர், உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

  • விவசாயிகள் செய்வதற்கு ஏற்ற துணைத் தொழில்கள்!

  • செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

  • இயற்கை வேளாண்மை பாரதத்துக்குச் சொந்தமானது! – பிரதமர் நரேந்திர மோடி சூளுரை!

  • ஜப்பானிய காடைகள்!

  • வறட்சிக்கு ஏற்ற வளமான நெல்லி!