My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

எவ்வளவு அழுத்தம் வந்தாலும் விவசாயிகளுக்குத் தீங்கு ஏற்பட விட மாட்டேன் – பிரதமர் மோடி உறுதி!

விவசாயி

வ்வளவு அழுத்தம் வந்தாலும் விவசாயிகளுக்குத் தீங்கு ஏற்பட விட மாட்டேன் என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பின் செயல்களை மனதில் வைத்து அவர் இவ்வாறு பேசினார்.

ஆமதாபாத் மண்ணில் வைத்துச் சொல்கிறேன்; அழுத்தங்களைத் தாங்கும் அளவிற்கு, தமது அரசு வலிமையைத் தொடர்ந்து அதிகரிக்கும் என்றார்.

நாட்டு மக்கள் நலன்களே தனக்கு முக்கியம் என்ற மோடி, சிறுதொழில் முனைவோர், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் என்று யாரும், எதற்கும் அஞ்ச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக, விவசாயிகளுக்குத் தீங்கு ஏற்படுவதைத் தமது அரசு வேடிக்கைப் பார்க்காது என்று மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், நம் நாட்டைக் குறிவைக்கும் பயங்கரவாதிகளையும் அவர்களின் எஜமானர்களையும், அவர்கள் எங்கு மறைந்திருந்தாலும் இந்தியா விட்டுவைக்காது என்று கூறிய அவர், அதற்கு பயங்கரவாதிகளை வெறும் 22 நிமிடங்களில் அழித்த, பஹல்காம் தாக்குதலே சாட்சி என்றும் பேசினார்.


செய்திப் பிரிவு, பச்சை பூமி


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!

  • மரவள்ளியைத் தாக்கும் சிலந்திப் பூச்சி!

  • தேசிய விவசாயிகள் தினம் 2025!

  • பாம்புக் கடி – தப்பும் முறைகள்!

  • பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

  • களர், உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

  • விவசாயிகள் செய்வதற்கு ஏற்ற துணைத் தொழில்கள்!

  • செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

  • இயற்கை வேளாண்மை பாரதத்துக்குச் சொந்தமானது! – பிரதமர் நரேந்திர மோடி சூளுரை!