My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


எவ்வளவு அழுத்தம் வந்தாலும் விவசாயிகளுக்குத் தீங்கு ஏற்பட விட மாட்டேன் – பிரதமர் மோடி உறுதி!

விவசாயி

வ்வளவு அழுத்தம் வந்தாலும் விவசாயிகளுக்குத் தீங்கு ஏற்பட விட மாட்டேன் என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பின் செயல்களை மனதில் வைத்து அவர் இவ்வாறு பேசினார்.

விளம்பரம்:


ஆமதாபாத் மண்ணில் வைத்துச் சொல்கிறேன்; அழுத்தங்களைத் தாங்கும் அளவிற்கு, தமது அரசு வலிமையைத் தொடர்ந்து அதிகரிக்கும் என்றார்.

நாட்டு மக்கள் நலன்களே தனக்கு முக்கியம் என்ற மோடி, சிறுதொழில் முனைவோர், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் என்று யாரும், எதற்கும் அஞ்ச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக, விவசாயிகளுக்குத் தீங்கு ஏற்படுவதைத் தமது அரசு வேடிக்கைப் பார்க்காது என்று மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும், நம் நாட்டைக் குறிவைக்கும் பயங்கரவாதிகளையும் அவர்களின் எஜமானர்களையும், அவர்கள் எங்கு மறைந்திருந்தாலும் இந்தியா விட்டுவைக்காது என்று கூறிய அவர், அதற்கு பயங்கரவாதிகளை வெறும் 22 நிமிடங்களில் அழித்த, பஹல்காம் தாக்குதலே சாட்சி என்றும் பேசினார்.


செய்திப் பிரிவு, பச்சை பூமி

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்:


படிக்கலாம்:

  • ஜப்பானிய காடைகள்!

  • வறட்சிக்கு ஏற்ற வளமான நெல்லி!

  • கரிசல் நிலம்!

  • கத்தரி விதை உற்பத்தி!

  • பால் கறவையை முடக்கும் மடிவீக்க நோய்!

  • நெற்பயிரைத் தாக்கும் வேர் முடிச்சு நூற்புழுக்கள்!

  • வறட்சியில் கை கொடுக்கும் சூபாபுல் தீவன மரம்!

  • மாடு வளர்க்க மலைப்பாக இருக்கிறதா?

  • நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை!