பருவமழை பொய்த்ததன் காரணமாக ஏற்பட்ட வறட்சி தமிழகம் முழுவதும் நீடித்து வருகிறது. பயிர்கள் கருகி வருவதைக் கண்டு வருந்தும் விவசாயிகள் ஆங்காங்கே மரணமடைந்து வரும் நிலையில், தமிழக அரசு உயர்நிலைக்குழுவை மாவட்டம் தோறும் அனுப்பி ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் விவசாய பாதிப்பு குறித்து, தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நல மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, மற்றும் நாமக்கல் மாவட்ட வறட்சி நிலை ஆய்வு குறித்த மேற்பார்வை அலுவலரும் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையருமான எஸ்.மதுமதி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் அவர்களுடன் இணைந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.செல்வக்குமார சின்னையன், நாமக்கல் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சி.சந்திரசேகரன், திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் உடனிருந்தனர்.
மு.அண்ணாதுரை,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாமக்கல் மாவட்டம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

