My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

நம்மாழ்வார் அமுதமொழி-7

நம்மாழ்வார்

ந்த நோய்க்கு சிகிச்சை பார்ப்பதை விடவும், வருமுன் காப்பதே மேல் என்னும் ஒரு நம்பிக்கை உலவுகிறது. இது முற்றிலும் சரியல்ல. வருமுன் தடுப்பது மட்டுமே சரியானதாகும்.

இயற்கையை ஒட்டிய வாழ்க்கையும், இயற்கை மருத்துவமும் நோயாளிகளுக்கு என்றும் மக்கள் நம்புகிறார்கள். இதுவும் அறியாமையின் வெளிப்பாடு தான். நலமாக இருப்பவர்கள் முனிவர்கள் மட்டுமே. அவர்கள் முதிர்ந்த தேங்காயைப் போன்றவர்கள். உள்ளேயுள்ள கொப்பரை உலர்ந்து சுருங்கி ஓட்டிலிருந்து பிரிந்து விடுகிறது. முனிவர்களும் உடம்பிலிருந்து பற்றை அறுத்துக் கொள்கிறார்கள்.

நாகரிக வாழ்க்கை வாழ்பவர்களில் நோயற்றவர்கள் என்று எவருமில்லை. உடல் வலி, துன்பம் வரும் போது தான் நோய் இருப்பதை அறிகிறார்கள். உண்ணும் மருந்து உடல் துன்பத்தை மட்டுமே குறைக்கிறது. நோய்க்கான காரணத்தை விலக்கவில்லை. மது அருந்துவது மட்டுமே தீமையாகக் கருதப்படுகிறது. அதுவும் குடிப்பவர் அப்படிக் கருதுவது இல்லை.

காபி, டீ, புகையிலை மூன்றையும் விட்டாலே 75 விழுக்காடு நோய்கள் விலகுவதாக மருத்துவர் தி.இராஜு எழுதினார். காபியே பல நோய்களுக்கும், குணக்கேடுகளுக்கும் காரணமாக அமைகிறது என்று, ஓமியோ மருத்துவர் வெள்ளைச்சாமி கூறுகிறார்.

தீய பழக்கங்கள் எவை எவை என்று பட்டியல் போட வேண்டியது இல்லை. இயற்கையை உற்று நோக்கினால், விட்டு விலக வேண்டியவை எவை எவை என்பது விளங்கும். செய்தக்க அல்ல செயக்கெடும்!


நோயினைக் கொண்டாடுவோம் என்னும் நூலில் இருந்து…


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • சரியான உத்திகளைக் கடைப்பிடித்தால் இலாபம் பார்க்கலாம்!

  • எல்-நினோ காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய உத்திகள்!

  • உணவுப் பொருள்களில் மறைந்திருக்கும் அஃப்ளாடாக்சின் நச்சு!

  • உலக மருத்துவ ஆய்வுகளில் கவனம் பெறும் பிரண்டை!

  • உயிர்ம வேளாண்மைச் சான்றைப் பெறுவது எப்படி?

  • மேலே மின்சார உற்பத்தி; கீழே பயிர் சாகுபடி!

  • நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!

  • சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

  • ஜப்பானிய காடை வளர்ப்பு – 1