My page - topic 1, topic 2, topic 3

நம்மாழ்வார் அமுதமொழி-8

நம்மாழ்வார்

ருத்துவர் நோய் என்னவென்று சோதிக்கிறார். அதற்குப் புரியாத மொழியில் பெயரொன்றை வைக்கிறார். பிறகு, சில மருந்துகளை எழுதுகிறார். இந்த மருந்துகள் எல்லாம் மனித உடலுக்கு அந்நியமானவை. அலுமினியப் பாத்திரத்தில் சமைப்பது எப்படித் தீமை பயக்குமோ, அதேயளவில், மாத்திரையானாலும், ஊசியானாலும் தீமை பயக்கிறது.

நோயினால் ஏற்படும் தீமைகளை நீக்குவதற்கு நஞ்சுகளை மருந்தாகக் கொடுக்கிறார்கள். சில நஞ்சுகள் நோயாளிகளை மெல்ல மெல்லக் கொல்லுகின்றன. சில நோயாளியை உடனே கொல்லுகின்றன. இப்படி, நஞ்சுகளை நோயாளிகளுக்கு ஊட்டுவதற்கு, லைசென்ஸ் வாங்கி வைத்திருப்பவர் தான் டாக்டர்.

உடல் வேதனை குறைந்தால் சரியான மருந்து. இப்படி அறிவதே அலோபதி. இல்லாவிடில் வேறு மருந்தை நோயாளியின் உடலில் செலுத்தி சோதிக்கிறார். உடனடி வேதனை குறைந்தால் நோய்க்கான வேர்க்காரணம் நீடிக்கிறது. அது நீக்கப்படவில்லை. உடலிலிருந்து உடலுக்கு அந்நியமானவை நீக்கப்படும் போது தான் நோயாளி குணமாகிறார்.

இதைத் தான் வள்ளுவர்,
அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு
என்று கூறுகிறார்.

உண்டது அனைத்தும் வெளியேறிய பின்பும் வயிற்றில் காலியிடம் இருக்குமாறு உண்பதே நீண்ட நாட்கள் வாழ்வதற்கு அடிப்படை. மீண்டும் மீண்டும் நஞ்சை உண்பது, தொடர்ந்து நோயாளியாக இருப்பதற்கே உதவும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!


நோயினைக் கொண்டாடுவோம் என்னும் நூலில் இருந்து…

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!

  • சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

  • ஜப்பானிய காடை வளர்ப்பு – 1

  • ஜப்பானிய காடை வளர்ப்பு முறை!

  • மரவள்ளி இலையில் மக்களுக்கான உணவுப் பொருள்கள்!

  • விளைச்சலைக் கெடுக்கும் எலிகளும் கட்டுப்பாடுகளும்!

  • முயல் வளர்ப்பும் விற்பனை வாய்ப்புகளும்!

  • பழ ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

  • சங்க இலக்கியத்தில் காட்டப்படும் யாடும் ஆடும்!