கரும்புத்தோகை மற்றும் கரும்பாலைக் கழிவை ஊட்டமேற்றிய
Fertilizer மாற்றுவது குறித்து இங்கே பார்க்கலாம்.
» காய்ந்த கரும்புத் தோகையை, 15 செ.மீ. உயரம், 7 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலத்தில் பரப்ப வேண்டும்.
» அதற்கு மேல், 5 செ.மீ. உயரத்துக்கு கரும்பாலைக் கழிவைப் பரப்ப வேண்டும்.
» அதற்கு மேல், நூறு கிலோ தோகைக்கு, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட், 2 கிலோ ஜிப்சம் மற்றும் ஒரு கிலோ யூரியா வீதம் எடுத்துப் பரவலாகத் தூவிவிட வேண்டும்.
» அடுத்து, அடுக்கு முழுவதும் நன்கு நனையும் வகையில் நீரைத் தெளிக்க வேண்டும்.
» இப்படி, மீண்டும் மீண்டும் இதே பொருள்களைக் கொண்டு இந்த அடுக்குக்கு மேல் அடுக்காக, 1.5 மீட்டர் உயரம் வரும் வரை அமைக்க வேண்டும்.
» நீரைத் தெளிப்பதற்கு மாற்றாக, தொழுவுரக் கரைசலையும் தெளிக்கலாம்.
» பிறகு, அடுக்கு முழுவதையும், மண்ணும் ஆலைக்கழிவும் சமமாகக் கலந்த கலவையால், 15 செ.மீ. உயரத்துக்கு மூடி விட வேண்டும்.
» அடுக்கு முழுவதும் நனையும் வகையில், 15 நாட்களுக்கு ஒருமுறை நீரைத் தெளித்து வர வேண்டும்.
» மூன்று மாதமானதும் அடுக்கைப் புரட்டி நன்கு கலந்து விட்டு, ஒரு மாதம் வரை அப்படியே விட்டுவிட வேண்டும்.
» நான்காம் மாத முடிவில் மறுபடியும் புரட்டிக் கலந்து விட்டு, 5-வது மாத முடிவு வரை, 15 நாள் இடைவெளியில் நீரைத் தெளித்து வர வேண்டும்.
» இப்படித் தயாரிக்கப்படும் கரும்புத்தோகை கம்போஸ்ட்டில், 1.60 சதம் தழைச்சத்து, 1.10 சதம் மணிச்சத்து, 0.40 சதம் கால்சியம், 0.60 சதம் மக்னீசியம், 0.48 சதம் கந்தகம் இருக்கும்.
» மேலும், மில்லியனில் ஒரு பங்கு வீதம் இரும்புச்சத்து 2710, மெக்னீசியம் 450, துத்தநாகம் 370, தாமிரம் 80 மற்றும் கரிமம் மற்றும் தழைச்சத்து 22:1 சதவீதம் இருக்கும்.
இயக்குநர்,
மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


