My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விவசாயப் பழமொழிகள்! | பகுதி-2

பழமொழிகள்

விவசாயப் பழமொழிகள் – 20

  1. நொண்டி மாடு ஒன்றிருந்தால் நொடித்தவனும் நிமிர்ந்திடுவான்!
  2. அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி!
  3. காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்!
  4. பூமியைப் போலப் பொறுமை வேண்டும்!
  5. முளையில் கிள்ளாமல் விட்டால், கோடாலியால் தான் வெட்ட வேண்டும்!
  6. எள்ளுக்கு ஏழு உழவு, கொள்ளுக்கு ஓர் உழவு!
  7. மழை விட்டாலும் தூவானம் விடவில்லை!
  8. நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்!
  9. அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
  10. காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்!
  11. ஆடு கொழுத்தால் இடையனுக்கு இலாபம்!
  12. கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்!
  13. விளையும் பயிர் முளையிலே தெரியும்!
  14. புண்ணியத்துக்கு உழுத மாட்டைப் பல்லைப் பிடித்துப் பதம் பார்த்தது போல!
  15. வெட்டுறவனுக்கு நிழல் தரும் மரம், தோண்டுறவனுக்கு இடம் தரும் மண்!
  16. ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலன் தரும்!
  17. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே!
  18. வீட்டுக்குச் செல்வம் மாடு, தோட்டத்துகுச் செல்வம் முருங்கை!
  19. எருமை வாங்கும் முன்னே நெய் விலையைக் கூறாதே!
  20. கள்ளிக்கு எதுக்கு முள்வேலி!


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

1 Comment

உங்கள் கருத்து?

மேலும் படிக்கலாம்:

  • எல்-நினோ காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய உத்திகள்!

  • உணவுப் பொருள்களில் மறைந்திருக்கும் அஃப்ளாடாக்சின் நச்சு!

  • உலக மருத்துவ ஆய்வுகளில் கவனம் பெறும் பிரண்டை!

  • உயிர்ம வேளாண்மைச் சான்றைப் பெறுவது எப்படி?

  • மேலே மின்சார உற்பத்தி; கீழே பயிர் சாகுபடி!

  • நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!

  • சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

  • ஜப்பானிய காடை வளர்ப்பு – 1

  • ஜப்பானிய காடை வளர்ப்பு முறை!