My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

நம்மாழ்வார் அமுத மொழி-2

நம்மாழ்வார்

ளவறிந்து உண்ண வேண்டும். அதுவும், பசித்த பின் புசி என்று அவ்வை சொன்னார். நடப்பில் இந்த இரண்டையும் கடைப்பிடிப்பது எளிதல்ல. பசி வருமுன்பே வெளியில் புறப்பட வேண்டியுள்ளது. போகிற இடத்தில் நல்ல உணவு கிடைப்பது எளிதல்ல.

விருந்துக்குப் போன இடத்தில் சாப்பிட்ட்டுப் போங்கள் என்னும் உபசரிப்பை மீற முடியவில்லை. வடை, பாயசம் என்னும் சொற்களே இனிக்கின்றன. முடிவில், சாப்பிட ஒரு பழம் கொடுக்கிறார்கள். பக்கத்து இலைக்காரர் மேலும் ஒரு கரண்டி பாயசம் ஊற்றும்படி பரிந்துரை செய்கிறார்.

இத்தகைய சூழ்நிலையில் நடப்பது என்ன? அளவுக்கு அதிகமாக உண்கிறோம். பசிக்கும் முன்பே உண்கிறோம். இதன் விளைவு என்ன?

இரைப்பை அமிலத்தைச் சுரந்து விடுகிறது. வயிறு முட்ட உண்ட உணவு புரள்கிறது. இடப் பற்றாக்குறை காரணமாக, நுரையீரல், இதயம் நெருக்கடிக்கு உள்ளாகி மூச்சு முட்டுகிறது.

கூழாக்கப்படும் உணவு, உணவுக் குழாயில் புகுந்து தொண்டை வரை மேலேறுகிறது. உணவுக் கூழுடன் அமிலமும் சேர்ந்து மேலேறுவதால், தொண்டையில் எரிச்சல் வருகிறது.

இதற்கு என்ன சிகிச்சை? வாய்க்குள் விரலை விட்டு வாந்தி எடுப்பதை விடவும் சிறந்த மருத்துவம் எதுவும் கிடையாது. இதனால் அறிய வேண்டியது என்ன? பசித்த பின் புசி.

விருந்து படைப்போர் அறிய வேண்டியது இதுதான்: இன்னும் கொஞ்சூண்டு என்று வற்புறுத்த வேண்டாம்.


நோயினைக் கொண்டாடுவோம் என்னும் நூலில் இருந்து…


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

உங்கள் கருத்து?

மேலும் படிக்கலாம்:

  • எல்-நினோ காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய உத்திகள்!

  • உணவுப் பொருள்களில் மறைந்திருக்கும் அஃப்ளாடாக்சின் நச்சு!

  • உலக மருத்துவ ஆய்வுகளில் கவனம் பெறும் பிரண்டை!

  • உயிர்ம வேளாண்மைச் சான்றைப் பெறுவது எப்படி?

  • மேலே மின்சார உற்பத்தி; கீழே பயிர் சாகுபடி!

  • நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!

  • சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

  • ஜப்பானிய காடை வளர்ப்பு – 1

  • ஜப்பானிய காடை வளர்ப்பு முறை!